வித்வான்

ல . சண்முகசுந்தரம்

“கரிசல் மண்ணிலும் மாணிக்கம் கிடைக்கும்… எனக்கு சண்முக சுந்தரம் கிடைத்தார் போல”
- ரசிகமணி டி.கே.சி

“லானா சானா” என்றும் “லச” என்றும் “LS” என்றும் இலக்கிய சமூகமும், மாணவ சமூகமும் அன்போடு அழைத்த அழைப்புக்கு சொந்தக்காரர் வித்வான். ல.சண்முகசுந்தரம்…

ல. சண்முக சுந்தரம், ரசிகமணி டி.கே.சி - முதல் சந்திப்பும்

ரசிகமணி டி.கே.சி கட்டுரையால் ஈர்க்கப்பட்ட லசவின் மனம் ‘டிகேசி’யைக் காண அவரை குற்றாலத்திற்கு இழுத்துச்சென்றது, முதல் சந்திப்பே இனி காலமெல்லாம் டிகேசியின் நிழலாய் தொடர வேண்டுமென்ற உறுதிப்பாடு கொள்ளச் செய்துவிட்டது, டிகேசியுடன் கண்ணுக்கு கண் கண்டு மகிழ்ந்து உரையாடி வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் தான், எஞ்சிய 60 ஆண்டுகளும் லச தனது மனதில் ரசிகமணியோடு உறவாடி வாழ்ந்தார், ரசிமணியோடு உறவாடிய தருணங்களை விட பெற்ற விருதுகளும் கிடைத்த புகழும் பெரிதாகத் தன்னை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை என்பார் லச

“லச”வின் விருதுகள்

“லச”வின் படைப்புகள்

“தங்கள் புலமையையும் ஆர்வத்தையும் வியந்து கொண்டே இருக்கின்றேன் இருட்டுக்குள் கிடக்கும் மணிகளைத் தேடித்தேடி ரொம்பவும் கஷ்டப்படுகிறீர்களே… அவ்வளவுக்கும் எங்கே இருந்து தான் பொறுமை வந்ததோ… எப்படியோ அநேக மணிகளைத் தேடி எடுத்து விட்டீர்கள் ரொம்ப சந்தோசம்…”

- டி.கே.சி கடிதத்தில் இருந்து,

24.06.1946

ல. சண்முக சுந்தரம்

“கல்வி என்றால் யோசிக்க வைக்க வேண்டும், அறியாமை அகல வேண்டும், மூடத்தனம் ஒழிய வேண்டும், குருட்டுத்தனத்தை வளர்க்கின்ற காரியமாக இருத்தல் கூடாது”     

தமிழ் மொழியின் மேன்மையை பரப்பும் நோக்கில்

ல. சண்முகசுந்தரம்

பல தமிழ் தொடர்பான தலைப்புகளில் எழுதி, தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்களிப்புகளை செய்தார், பல சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

இலக்கியத்தின் மாபெரும் செம்மலாக விளங்கிய ல. சண்முகசுந்தரம், அவரது வாழ்க்கையை முழுவதுமாக தமிழ் மற்றும் கல்விக்காக அர்ப்பணித்தார். அவரது எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகள் இன்று பலருக்கும் வழிகாட்டுதலாக உள்ளன.